பக்கம்:மலர் மணம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடம்பை ஒருவாறு தேற்றிக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டுக் கல்லூரி வந்து சேர்ந்தேன். இன்னும் இரண்டு மாதங்களில் தேர்வு நடந்து முடியும். அத்துடன் எனது பி. ஏ. படிப்பும் முடிவுறுகிறது.

‘’ இந்தக் கவலைகள்ே யெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டும், அல்லியைய்ே நினைத்துக்கொண்டும், படிப் பைக் கோட்டைவிட்டு விடாதே.!” என்றெல்லாம். அப்பாவும் அம்மாவும் அறிவுரைகளைக் கூடை கூடையாய் என்மேல் கொட்டி அனுப்பி யிருந்தார்கள். அவர்கள் நினைக்கிற அளவுக்குப் படிப்பு எனக்குக் கடுமையான தாகவோ-கவலை யளிப்பதாகவோ தோன்றவில்லை. பி. ஏ. தேர்வில் வெற்றி பெறுவோமா - மாட்டோமா என்ற ஐயப்பாடும் எனக்கு ஏற்பட வில்லை. ஏன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/130&oldid=655974" இலிருந்து மீள்விக்கப்பட்டது