மணம் 233
அறையிலுள்ள படம்போலவே அதுவும் இருக்கிறதாம். எனவே, நம் வீட்டுப் படம் அந்த வீட்டுக்கு எப்படிப் போயிற்று? என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். அவளேயும் அழைத்துக்கொண்டு என் படுக்கையறைக்குப் போனேன். மாட்டிய படம் மாட்டியபடியே இருந்தது. “ நான் இந்தப் படத்தைக் கடையில் வாங்கினேன்இதேபோல் மங்களம் அக்காவும் கடையில் வாங்கி யிருக்கலாம்” என்று சொல்லி நான் அந்நேரத்துக்கு அவளே அமைதி பண்ணிவைத்தேன்.
நான் புரிந்துகொண்டேன்-மங்களம் யார் என்று! என் திருமணத்தன்று எடுத்த புகைப்படம்தான் அது! அதன் இன்னொரு படி மாமாவீட்டில் இருந்தது. அதுதான் இப்பொழுது மலரின் மங்களம் அக்காவீட்டில் இருப்பது. அந்த மங்களம் யார் ? அவள்தான் என் அல்லி நாங்கள் இருவரும் திருமணக் கோலத்தோடு படம் எடுத்துக் கொண்டோம். எனவே, அல்லி இருக்கும் இடம் இப்போது தெரிந்து விட்டது. இந்த உண்மையை மலருக்கோ, என் பெற்றாேருக்கோ நான் தெரிவிக்க வில்லை, மங்களம் அக்கா என்னும் மறு பெயரிலேயே அல்லி இன்னும் சில நாளேக்கு இருக்கட்டும் !
மலர் தன் மகள்தான் என்று அல்லிக்குத் தெரிந்து தான் இருக்கும். மலருக்காகவே அவள் அங்கே வேலை பார்க்கிருள் போலும் மலர் அங்கே படிப்பது அவளுக்கு எப்படி தெரியுமோ? எவ்வாறு அங்கேவந்து சேர்ந்தா ளோ ? எவ்விதமோ, எனக்கு இருந்த இரண்டு குறைகள் குறைந்துவிட்டன. ஒரு குறை, மலர் தன் தாய் கையால் வளர்வதற்கு இல்லேயே, என்பது. மற்றாெரு குறை, மலரோடு கொஞ்சிக் குலவ அல்லி கொடுத்துவைக்க