பக்கம்:மலர் மணம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 249

கவனித்ததாகத் தெரியவில்லை. அல்லி கிடைக்கா விட்டாலும், மலர்மணத்தை அவள் கண்டுகளித்த ஒன்றே எனக்குப் போதும்! அப்பொழுது, மணவறையில் அமர்ந்திருந்த மணமக்கள் இருவரும், ஒருவரை யொருவர் கண்சாய்த்து நோக்கிப் புன்முறுவல் பூத்துக்கொண் டிருந்ததை நோக்கி நான் பூரித்துப்போனேன். அந்தப் பூரிப்பில் அல்லியைப் பற்றிய கவலையை மறந்தேன். ஆணுல் நான் அல்லியை மறந்தேனே தவிர, அவள் மணமக்களுக்குக் கூறிய வாழ்த்தைத் திரும்பத் திரும்ப உருவேற்ற என் நாக்கு மறக்கவேயில்லை. இதோ :

திருமண மக்கள் நீடுழி வாழ்க! இந்நாள் போலவே எந்நாளும் நன்ள்ை ஆகுக! எல்லா நலங்களும் பெற்று இனிது திகழ்க !'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/251&oldid=656264" இலிருந்து மீள்விக்கப்பட்டது