இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மணம் 45
சொல்லி விட்டு, கொல்லேப் புறத்தின் வழியாக நான் வெளியேறினேன். என்மேலுள்ள பெரும் பிணிப்பால், தன்னே நான் பிரிந்து போவதைப் பொறுக்க முடியாமல், அல்லி தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த உருக்கமான காட்சியைக்கண்டு சுவைக்க எனக்கு வாய்ப்பில்லை. பெறுதற்கரிய மணியைப் பெற்று இழந்தவனப் போல் பெருங் கலக்கத்துடன் பிரிந்து சென்றேன்.
அல்லி என்ன ஆவாளோ. பாட்டிக்கு என்ன பதில் சொல்வாளோ. எப்படியாவது சமாளித்துக் கொள்வாள் தானே !