பக்கம்:மலர் மணம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம் 69

தாக நவின்றேன். அவள் அகமகிழ்ந்தாள். அவளது தலே நகை கற்பகத்திடம் என்னேக் காட்டிக் கொடுத்து விட்டதையுைம் தெரிவித்து, என் பையிலிருந்து அதை எடுத்துக் கொடுத்துவிட்டேன். வாங்கிக்கொண்டு, * இதை நான் காலையிலிருந்து தேடிக்கொண்டிருந்தேன். சரி, இதை நீங்கள் எனக்குக் கொடுத்தது போலவே, நானும் உங்களுக்குக் கொடுக்க ஒன்று கொண்டுவந் திருக்கிறேன்” என்று சொல்லி என் ஆவலைக் கிளப் பிள்ை.

‘ என்ன அது ‘ என்றேன்.

“பொறுங்கள் தருகிறேன். நீங்கள் கற்பகத்திடம் மாட்டிக்கொண்டதைப்போல, நானும் அம்மாவிடம் அகப்பட்டுக் கொண்டேன். பாட்டிக்கு ஒன்றும் தெரியா திருந்தும், அம்மா ஊரிலிருந்து வந்த அரைமணி நேரத் திற்குள்ளேயே என்னைப் பின்வருமாறு அதட்டி அலட்டத் தொடங்கிவிட்டார்கள் :- -

ஏண்டி அல்லி நாங்கள் ஊருக்குப் போயிருந்த போது இங்கே யாராவது வந்தார்களா ?”

இரவு வேளையில் யாரம்மா வருவார்கள் ?” “ அதுதாண்டி, இரவு வேளேயாய் இருந்ததால்தான் கேட்கிறேன், எவணுவது வந்தான என்று.” இங்கே யாரும் வரவில்லையே” “ உள்ளதைச் சொல்லடி நீலி.”

என்னம்மா இது ” ஆ ஒன்றுந் தெரியாத கள்ளி. உண்மையை ஒப்புக்கொள்ளுகிருயா ? அல்லது உன் அப்பாவிடம் சொல்லிவிடட்டுமா ? ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/71&oldid=656315" இலிருந்து மீள்விக்கப்பட்டது