பக்கம்:மலர் மணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 83

ஒவ்வொருவராக வீட்டிற்குள் சென்றுகொண்டிருந்தனர். மேற்குத் தெருவில் எங்கள் வீட்டிற்கு நேரே வந்தபோது, கற்பகம் உள்ளே சென்றாள். நான்மட்டும் வீட்டிற்குள் செல்லவில்லை. கடைசிவரையும் அப்பாவுக்குத் துணை யாக இருந்து அவர்களே அழைத்துக் கொண்டு வர வேண்டுமல்லவா ? வடக்குத் தெருவில் மாமா வீட்டிற்கு. நேரே சென்றதும், அல்லியும் அத்தையும் வீட்டை யடைந்தனர். என் கண்பார்வையிலிருந்து மறைவதற்கு, முன் அல்லி என்னைப் பார்க்கத் தவறவில்லே. ஆனல் அவள் முகத்தில் காலையில் இருந்த மலர்ச்சி இல்லைஅவள் கண்களில் காலேயில் இருந்த குறும்பு.இல்லேஅவள் உதடுகளில் காலையில் காணப்பட்ட புன்னகை. இல்லை. அல்லிமலர் வாடி வதங்கிச் சென்றது. தோல்வி பெற்ற் அப்பாவிடம், எப்படி தன் விருப்பத்தை வெளி யிட்டு வெற்றி பெற முடியும் என்ற ஏக்கயோஏமாற்றமோ-என்னவோ .

கூட்டமும் குறைந்தது; ஊர்வலமும் குமரக்கோட் டத்தை அடைந்தது. வழக்கமாக கடக்கும் எல்லா மரபு நிகழ்ச்சிகளும் முடிந்த பின்னர் அப்பாவும் நானும், ஆ வலு டன் எதிர்நோக்கிக் கெர்ன்வருந்த,

அம்மாவைக் காணும் ஆர்வத்துடன் வீடு சேர்ந்தோம்.

உணவு முடிந்தது. படுக்கைக்குப் போகு முன்பு

பகலில் நடந்தவற்றையெல்லாம் அம் கச் சொல்லிக

கொண்டிருந்தேன். தேர்தலில் தோற்றதில்ை lf) # l0 # அடைந்த ஏமாற்றத்தை நான் வருணித்துக்கொண் டிருந்த போது அம்மாவின்) முகம் கெட்டுவிட்டது. அண்ணன் அல்லவா ? கான ஆடிாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கே பருமூச்சு விட்டுக்கொண்டே படுக்கைக்குச் ட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/85&oldid=656330" இலிருந்து மீள்விக்கப்பட்டது