பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15



ஏமாற்ற ஏணிகளில்
சறுக்கிச் சறுக்கி
அடைய நினைத்த உச்சியின்
வரட்சியில்
'விரக்தி'
...கொப்பளிக்க அஞ்சி
நம்பிக்கையின்
உள்ளங்கால் விரிப்புகளில்
மீண்டும் மீண்டும் முயல்கின்ற
சோக நாடகம்

என்றும்

கரைகளைத் தொடாமலே ஓடும்
சலனங்களிலே
எதையோ தேடும்
தேட முயலும்...
புதைகுழி நாடகம்

என்றும் கூறுகிறார்.

அமைதிப் பனித்துளிகளை
ஏமாற்றக் கதிர்
உருத்தெரியாது உறிஞ்சும்
கொடுங்கோல் நாடகம்.

ஆகவும் இருக்கிறது.

அமைதியும், இன்பமும், ஆனந்தமும் புறத்திலிருந்து கிடைப்பதை விட, தன்னுள் - தனது அகத்துள் - கண்டு கொள்ளப்பட வேண்டியவை யாகும். தன்னுள் உறையும் மகத்துவத்தை உணர இயலாத அப்பாவி மனிதர்கள் அவற்றை வெளி