பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



25

வேடங்கள் பொய்யா?
வேடத்தில் வெளிப்படும் வினைகள் பொய்யா?

என்ற கேள்விகளை எழுப்புகிறார் கவிஞர்.

'புனைவுகள்'
புனைந்த பின்னரோ புதுவித நினைவுகள்

புனைந்த முகங்கள்
புனைவுக்குள்ளே
புகுந்து
சிக்கி
புன்னகைக்குள்ளே புலம்பிய போதும்
கடைக் கண் நடிப்பில்
கண்ணீர்த்துளிகள் கவரப்பட்டதை ::அறியா வெறியில்
அலறிச் சிரிப்பதும்
அழுது வெடிப்பதும்
வேடங்கள் பெற்ற வெற்றி அல்லவோ?

இந்தச் சிந்தனையின் மீது கவி ஒரு முடிவுக்கு வருகிறார்.

வேடங்கள் பொய்யல்ல
வேடத்தில் வெளிப்படும் வினைகள் ::தாம் பொய்
வேடங்கள் பொய்யெனில்
வேடம் புனைந்த
வேந்தன் பொய்யா?
வேலன் புனைந்த
வேந்தன் பொய்யா?

தர்க்கிக்கும் கேள்விகள் ஒருதெளிவுக்கு இட்டுச் செல்கின்றன.