பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9

தொகுப்புகளே மிகுதியாக வெளிவந்துள்ளன வந்து கொண்டும் இருக்கின்றன

தனிமனிதனின் அக நோக்கில் எழுதப்படுகிற கவிதைப் புத்தகங்கள் குறைவாகவே காணப்படு கின்றன.

இலக்கியத்தில் பல பிரிவுகளுக்கும் இடம் உண்டு: பல்வேறு சோதனைகளும் அவசியம் தான். வெவ்வேறு தன்மைகளில் இயற்றப்படுகிற படைப்புகளும், சோதனை முயற்சிகளும் இலக்கி யத்தை வளம் செய்யக் கூடியவை.

இந்தப் பொது உண்மையை இலக்கியவாதி களும் இலக்கிய ரசிகர்களும் கருத்தில் கொண்டு செயல்பட்டால், கட்சி-எதிர்கட்சி, மற்றும் கண்டனங்கள் தாக்குதல்கள், வசைபாடல்களுக்கு தேவையே இராது.

தமிழ்க்கவிதையில் தனிமனித அகநோக்கில் நல்ல கவிதைகள் எழுதிப் பெயர் பெற்றவர்களும் இருக்கிறார்கள். சமூக நோக்கில் தீவிரமாகக் கவிதைகள் படைத்து வெற்றி கண்டவர்களும் உள்ளனர்.

ஆனாலும், சமீப வருடங்களில், புதுக்கவிதை என்று சொல்லிக் கொண்டு அச்சில் வருகிற எழுத்துக்கள் பெரும்பாலானவற்றில் புதுமையும் இல்லை. கவிதையும் இல்லை என்பதை சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.

ம-2