இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இறக்கை முளைத்து வளர வளர
இன்ப முற்றேனே
பறப்பதற்கே குஞ்சுகள் ரண்டும்
பர பரத்தன
இன்னும் சிலநாள் பொறுங்கள் பொறுங்கள்
இன்பமாய்ப் பறக்கலாம்
என்ன சொல்லியும் கேட்கவில்லே
என்ன நான் செய்வேனே!
இரையைத் தேடிப் போயிருக்கையில்
இருப்புக் கொள்ளவில்லை
இரண்டு குஞ்சும் எட்டியே பார்த்து
பறக்க முயன்றன
என்ன செய்வேன் என்ன சொல்வேன்
சொன்னதைக் கேளாமல்
கூட்டுக் கடியில் தொப்பென்று வீழ்ந்து
துடியாய்த் துடித்தன
வீட்டுப் பூனை காத்திருந்தது
வீனாய் ஆசையெலாம்
வெறுங் கனவாய் போயிற்றென்றே
கண்ணிர் விட்டதுவே."