உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அசுரக் கூட்டத்தை அழித்தொழித்துக் கடவுளரை ரட்சிக்க, விஷத்தைக் கக்கும் நாலு புரவிகள் பூட்டப்பட்ட இரதத்தில் அமர்ந்தான் மெரோடாக். கையிலே கதை! உடல் முழுவதும் தீப்பிழம்பு! மின்னல் அவன் முன்னோடுவானாயிற்று. யாரையும் பிணைக்கும் மாயவலை ஒன்றை அனு தேவன் தந்தான். இவ்வளவு யுத்த சன்னத்துடன் மெரோடாக் கிளம்பினான். ‘ஜய விஜயீபவ!’ என்று வாழ்த்தினர் கடவுளர். ஏழுவிதமான பெருங்காற்றை ஏவிய வண்ணம், மாவீரக் கடவுளாம் மெரோடாக் சென்றான்.

மெரோடாக்
பாபிலோன் பிரபஞ்ச உற்பத்தி

மாமா! அதென்ன, மினுக் மினுக்கென்று தெரிகிறதே”

“நட்சத்திரம்!”

“நட்சத்திரம்னா என்ன மாமா?”

“நட்சத்திரம்! பளபளன்னு இருக்கும்......”

“பள பளன்னு இருக்கு, மாமா! எனக்கும்தான் தெரியுது......அது என்னது? ஏன் அப்படி இருக்கு? மாமா! அது எங்கே இருக்கு? ஏன் இருக்கு?”