உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


கரமிழந்த கடவுளுக்கு, மருத்துவக் கடவுள், உடனே வெள்ளியாலான விசித்திரமான கரத்தைத் தந்தான்! உண்மைக் கரம், எப்படிப் பயன்படுமோ அதேபோல இந்த வெள்ளிக் கரம் நுவாடா கடவுளுக்குப் பயன்பட்டது எனினும் அங்கம் இழந்தவன் கடவுளாக அரசோச்சுவது முறையல்ல, என்று எண்ணிய கடவுளா கூட்டம், நுவாடா தேவனைப் பீடத்திலிருந்து இறக்கிவிட்டு, புதிய கடவுளை பீடமேற்றத் தீர்மானித்ததாம்!

கரமிழந்த கடவுள்

ராதே! வராதே!!”
“போய்விடு! போய்விடு!”
“வீட்டைவிட்டு வெளியே போ!”

அந்தத் தேவனுடைய மாளிகையை அணுகினால், இதுதான் வரவேற்பு! மூன்று நாரைகள், மாளிகை வாயற்படியிலே இருந்துகொண்டு, தேவனைக் காணவருகிறவர்களுக்கு இந்தக் கடுமொழிகளை வீசுமாம்! முதல்நாரை, மாளிகையை நோக்கி யாராவது வருவதுகண்டதும், “வராதே! வராதே!” என்று கூவுமாம்! அதைப் பொருட்படுத்தாமல், மாளிகை எதிரே வந்து எவரேனும் நின்றால், இரண்டாவது நாரை, “போய்விடு! போய்விடு!” என்று கத்துமாம். போகாமல் நின்றால், மூன்றாவது நாரை, “வீட்டைவிட்டு வெளியே போ!” என்று கூவி விரட்டுமாம்.