கரமிழந்த கடவுள்
257
அப்படி மோகம்கொண்ட ஒரு தேவ மாது, எடெயின் தேவியை, ஈயாக மாற்றிவிட்டு, அங்கஸ் தேவனின் அன்பைப் பெற்றாள்.
ஒரு கடவுளுக்கு வாழ்க்கைப்பட்டு, மற்றோர் கடவுளால் களவாடப்பட்டு, கடைசியில் ஈயாக மாற்றப்பட்ட, எடெயின் என்ன செய்வாள்! ஏழாண்டுக் காலம் பறந்து திரிந்தாள், ஈ!!
இதுபோதுதான், அயர்லாந்துக்கு மாந்தர் மன்னரானது. அந்த மன்னன் ஒரு விருந்து நடத்திக்கொண்டிருந்தபோது, பறந்து வந்து, பான வட்டிலில் வீழ்ந்துவிட்டது—ஈ அவள் கருவிலே சென்றுவிட்டது. அழகிய ஒரு பெண் குழந்தை பிறந்தது.
பூலோகத்திலே மானிடக் குழந்தையாகப் பிறந்த எடெயின், கண்டவர் ஆச்சரியப்படும் கட்டழகியானாள். அந்த அழகியின் புகழ் அயர் முழுவதும் பரவிற்று. அயர் மன்னனே அவளைக் கண்டு பரவசமடைந்து திருமணம் செய்துகொண்டான்.
அப்போதுதான் மைடர் தேவனுக்கு, தன் மாஜி மனைவி அயர் மன்னனின் பட்டத்தரசியானது தெரிந்தது. பாசம் விடவில்லை. பூலோகம் சென்றான் வடிவழகன் உருவில். எடெயினைக் கண்டு, அவளுடைய ‘பூர்வோத்திரத்தை’ எடுத்துக் கூறி, கடவுளருலகுக்கு வந்துவிடும்படி கெஞ்சினான்—அந்த வஞ்சி மறுத்துவிட்டாள்!
மைடர் தேவனுக்கோ தணியாத தாபம். என்ன தந்திரம் செய்தேனும், தன் முன்னாள் மனைவியை மீண்டும் பெறவேண்டும் என்று தீர்மானித்தான்.
17