பதிப்புரை
★
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதுதான் தமிழர் நெறி—தமிழரின் கடவுட் கொள்கை. இதற்கு மாறாக நூற்றுக்கணக்கான தெய்வங்களும் அவை பற்றி ஆயிரக்கணக்கான புராணங்களும் கட்டுக் கதைகளும் உலவுகின்றன நம் நாட்டில்.
இவற்றைக் கட்டுக்குலையாது கட்டிக் காப்பதற்கு, மந்திரிகள், மடாதிபதிகள், மதத் தரகர்கள் முதலிய பல தரத்தினர் முயன்றபடி உள்ளனர்.
இந்தப் புராணப் புளுகுகளைத் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று சாதித்திட ஒரு புரோகிதக் கூட்டமும், அவற்றைக் கற்பனை நயமும் தத்துவ விளக்கங்களும் நிறைந்த இலக்கியங்கள் என்று கூறி, அப்படிப்பட்ட உயர்ந்த கற்பனைத்திறனை உலகில் வேறு எங்கும், எந்த நாட்டிலும் காணுதல் அரிது என வாதிட்டிட ஒரு கற்றறிந்தார் கூட்டமும் இன்றும் இங்குள்ளன.
கடலுக்கும் காற்றுக்கும் நம் பரதகண்டத்தில் மட்டுந்தான் கடவுளர் இருந்தனரா? இங்கு மட்டுமே அவர்களுக்குப் புராணங்களும் புனித ஆலயங்களும் பூசாரிகளும் இருந்தனரா? நம் நாட்டவரின் கற்பனைத் திறனைப்போல் வேறு எங்குமே கண்டதில்லை என்பதும் உண்மைதானா?
“இல்லை” என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. கிரேக்க நாட்டிலே, ரோமிலே, பாபிலோனிலே, பிரிட்ட-