உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தந்தையைப் போரில் வென்ற ஜுவஸ், தந்தையின் அரியாசனத்தில் அமர்ந்துதாரன் மந்திராலோசனைப்படி ஆட்சி புரியலானான். தந்தை குரோனாஸ் விழுங்கிய குழந்தைகளை எல்லாம், மீண்டும் அவன் உள்ளிருந்து வெளியே, உயிருடன் கொண்டுவருவதற்காக கடும் விஷமொன்றைத் தயாரித்து குரோன்சை பருகச் செய்தான். உடனே உள்ளே இருந்த பாசிடன், ப்ளுட்டோ, ஹெஸ்ட்டியா, டெமீடா, ஹீரா எனும் குழந்தைகள் யாவும் வெளியே வந்தன, உயிருடன் இவைமட்டுமா, குழந்தையென நம்பி விழுங்கிவிட்டானே, கல், அதுவுங்கூட வெளியே வந்துவிட்டதாம். உடன்பிறந்தார்களை தந்தையின் வயிறாகிய சவக் குழியிலிருந்து மீட்டான்.

ஜுவஸ்

தலைப்பைக் கண்டே, சீறிச் சபித்திட வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும், ஆத்தீகத்தின் பாதுகாவலர் தாமே என்ற எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு.

“ஆதி அந்தமில்லாத கடவுளையா, ‘மாஜி’ என்று கூறுகிறாய்; மதியீனனே! மந்திரியா, ராஜதந்திரியா, மன்னனா, சீமானா, மகேசனாயிற்றே! மன்னன் மாஜியாவதுண்டு, மந்திரி மாஜியாவதுண்டு, கடவுளை ‘மாஜி’ என்கிறாயே மமதையாளனே! இந்தப் பாபம் உன்னைச் சும்மாவிடுமா” என்று சுடுசொல் பல கூற எண்ணுவர், நாம் ஏதோ நாத்தீகம் பேசுகிறோம் என்ற எண்ணம் கொண்டு.