உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மாஜி கடவுள்கள்


தலைப்பை மீண்டும், பார்க்கும்படி, கருத்துடன் கவனித்துப் பார்க்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

‘மாஜி கடவுள்’ அல்ல, தலைப்பு; மாஜி கடவுள்கள்!! என்பது தலைப்பு; புரிகிறதா உண்மை?

பல கடவுள்களை, பூஜித்துக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது, எல்லா இடத்திலும்.

தந்தைச்சாமி, தாய்ச்சாமி, தாய்ச்சாமிக்கு ஒரு சக்களத்திச்சாமி, பிள்ளைச்சாமி, பெண்சாமி, என இவ்வண்ணம், பல தெய்வ வழிபாடு இருந்து வந்தது—அறிவுத் தெளிவு இல்லாதிருந்தபோது—உலகில் பல நாடுகளில்.

ஒருவனே தேவன்!—என்ற அடிப்படை உண்மையும், ஒழுக்கமே மதம் என்ற உன்னதக் கோட்பாடும், அறிவுத் துறையிலே. அரியாசனம் ஏறுவதற்கு முன்பு, பல தெய்வ வழிபாடுதான், அங்கெல்லாம் இருந்து வந்தது.

பகலுக்கு ஒரு தெய்வம், இரவுக்கு இன்னொன்று! பஞ்சம் தரும் தேவதை ஒன்று, அதைப்போக்கும் தெய்வம் மற்றொன்று; படைகலக்கும் தெய்வமொன்று, இடிமுழக்கும் தெய்வம் ஒன்று, என்ற விதமாக, எண்ணற்ற கடவுட் கூட்டத்தை, மக்கள் கும்பிட்டு வந்தனர்—பல்வேறு நாடுகளில்.

மனமாசு நீக்கக்கூடிய பகுத்தறிவுக் கதிர் தோன்றிய பிறகு, பல தெய்வ வழிபாடு என்பது, உண்மையான ஆத்தீகமாகாது—மதமாகாது—அருள் பெறும் வழியாகாது—மனமருள் கொண்ட மக்களை, சூது மதிமிகுந்த பூஜாரிக் கூட்டம், பிடித்தாட்டவே, கட்டிவிடப்பட்ட, கற்பனை இது, என்ற எண்ணம் வெற்றி பெற்றது; அந்த வெற்றியின் காரணமாக, பல கடவுள்கள், மாஜிகளாயினர்!

அந்த மாஜி கடவுள்களையே, நாம் மதத்தின் மாசு போக்கும் செயலைக்கூட, நாத்தீகமோ, என்று மருட்சி-