vii
“மாஜி கடவுள்கள்”, கடவுளர்கள் பற்றி நமக்குத் தரப்பட்டுள்ள கருத்துக்கள் தவறானவை என்பதை விளக்குகிறது. கடவுள் தன்மை பற்றி நாம் நன்கு சிந்தித்து நல்லதொரு முடிவு காண உதவுகிறது. ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற தமிழரின் செந்நெறி பரவ வழிவகுக்கிறது.
இதில் ஒருசில கட்டுரைகள் “திராவிட நாடு” இதழில் வெளி வந்தவை; பல புதிதாக எழுதிச் சேர்க்கப்பட்டவை. சீனம் போன்ற இன்னும் சில நாட்டுக் கடவுளர்கள் பற்றியும் எழுதிச் சேர்க்க அண்ணா நினைத்திருந்தார். அதற்குள்ளாக அரசாங்க அழைப்பு வந்ததால், வெஞ்சிறை ஏகினார், அச்சுத்தாள்களைக்கூட அவர்கள் பார்த்துப் பிழை திருத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அண்ணா சிறையில், மக்களிடையே இருந்து பிரிக்கப்பட்டுள்ள நிலையில். ஆனாலும் அவருடைய கொள்கைகள், பட்டி தொட்டிகளிலும், அவர்தம் அருமைத் தம்பிமார்களால் பரப்பப்படுகின்றன. அவர்களின் நூல்கள் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஊக்கமும் உணர்ச்சியும் அளித்து வருகின்றன. அந்தப் பணியிலே “மாஜி கடவுள்களும்” ஈடுபடுகிறது.
‘மாஜி கடவுள்கள்’ அண்ணா கருதிய பணியைத் தமிழகத்தில செய்யும் என்று நம்புகிறோம்.
இந்நூலையும், இன்னும் பல நூல்களையும் வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்கு அளித்து வருகின்றமைக்கு அண்ணா அவர்களுக்கு எங்கள் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்குகின்றோம்.
சென்னை. |
க. அ. செல்லப்பன். | ||||
27—10—53 |