பாசிடன்
77
லுக்குச் சிக்கல் ஏற்படாது. எனவே நமக்கு ஏற்றவன் இடாசே, என்று தீர்மானித்தாள்.
அசரீரி அறிவித்தபடி, அவள் இடாசையே மணம் செய்துகொண்டாள்.
அபாலோவின் திட்டம் முறிந்தது கண்டு, பாசிடன் மகிழ்ந்தான்.
இப்படிப் பல கதைகள், பாசிடனைப்பற்றி, கடலாதிபதியின் பராக்கிரமத்தைப்பற்றி, மகாகவி ஹோமர்கூடத்தான் பாடியிருக்கிறார்! கல்லுருவங்கள் பல சமைத்தனர், கலைத் திறமையுடன்! கோயில்கள் எழுப்பினர் பல ஊர்களில்! எனினும் அறிவு வளர்ச்சி ஏற்பட்டதும், இப்படி எல்லாம் கற்பனைகளை நம்பி நம்பி, கருத்தைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் உதித்தது. கடலின் தன்மையும் பொருளும் விளங்காவிட்டால், கண்டபடி ஒரு கதை கட்டுவதா!—என்று கேலி பேசினர் முதலில்—ஏற்கனவே கட்டப்பட்ட கதை அஞ்ஞானத்தின் அடையாளம் என்று வெறுத்துத் தள்ளினர்; இன்று விஞ்ஞானம், கடலைப்பற்றிய அறிவுரையை அவனிக்கு அளித்திருக்கிறது. பாசிடன் மறைந்தான்; மாஜி கடவுளானான்!!
❖