பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34


அடுத்த ஆண்டு, ஹஜ் சிறப்பு நாளில், முன்பு வந்தவர்களில் சிலரும் ஒளஸ் கோத்திரத்திலிருந்த சிலரும் ஆக மொத்தம் பன்னிருவர் வந்தனர். அவர்களில் புதிதாக வந்தவர்களும் உடனேயே இஸ்லாத்தில் சேர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் பெருமானார் அவர்களிடம் சில வாக்குறுதிகள் அளித்தனர். அவை பின்வருமாறு:

1. நாங்கள், இறைவனுடன் வேறு யாரையும் இணை வைப்பதில்லை.
2. விபசாரம், களவு செய்வதில்லை.
3. மக்களைக் கொல்வதில்லை.
4. நபி அவர்களை முழுமையாகப் பின்பற்றுவோம்.
5. சுக துக்கங்களில் அவர்களுடன் உண்மையாக இருப்போம்.

இவ்வுறுதி மொழி நிறைவேறியதும், இஸ்லாத்தின் கொள்கைகளை தங்கள் நாட்டில் பரப்புவதற்காகப் பெருமானார் அவர்களின் சீடர்களில் ஒருவரை தங்களோடு அனுப்பி வைக்குமாறும் வேண்டிக் கொண்டனர்.