பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

போர்த்துக்கொண்டு நீர் படுத்துக்கொள்ளும். காலையில் எழுந்து என்னிடம் நம்பிக்கையாகக் கொடுக்கப்பட்டிருந்த பொருள்களை, அவற்றிற்கு உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நீர் மதீனாவுக்கு வந்து சேரும்" என்று கூறினார்கள்.

அதன்பின் பெருமானார் அவர்கள் வெளியே வந்து, கஃபாவைப் பார்த்து, "மக்காவே! உலகிலுள்ள அனைத்திலும் நீ எனக்கு மேன்மையாக இருக்கிறாய். ஆனால் உன்னுடைய மக்களோ, என்னை இங்கே இருக்கவிடவில்லை" என்று கூறிவிட்டு, அபூபக்கர் அவர்கள் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்து இருவரும் புறப்பட்டுச் சென்று மூன்று மைல் தொலைவிலுள்ள தெளர் என்னும் குகையில் தங்கினார்கள்.


25. முதல் பள்ளிவாசல்

மதீனாவுக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள குபா என்னும் ஊரில் பெருமானார் அவர்களும் அபூபக்கர் அவர்களும் வந்து சேர்ந்தனர்.

அங்கே இருந்த அன்சாரிகள் (மதீனாவாசிகள்) பெருமானார் அவர்கள் வருகை தெரிந்ததும், மிகுந்த அன்போடு வரவேற்று அழைத்து வந்து உபசரித்தனர்.