இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
57
பழைய உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொண்டார்கள்.
பனூநலீர் கூட்டத்தார் இரண்டாவது தடவையும் பெருமானார் அவர்களுக்கு ஒரு தூது அனுப்பினார்கள்.
அதாவது: தங்களுக்கு இஸ்லாத்தைப் போதிப்பதற்காக முஸ்லிம்களில் மூன்று பேரையாவது கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்றும் தாங்களும் தங்களுடைய மதகுருக்கள் மூவரைக் கூட்டிக்கொண்டு வருவதாகவும், அந்த மதகுருக்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாயிருந்தால், தாங்களும் அவ்வாறே செய்வதாயும் சொல்லி அனுப்பினார்கள்.
பெருமானார் அவர்களும் அதற்குச் சம்மதித்துச் சென்றபோது அவர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்க யூதர்கள் சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என உறுதியான செய்தி கிடைத்ததால் உடனே திரும்பி விட்டார்கள்.
பெருமானார் அவர்கள் கட்டளையிடுவார்களானால், அவர்கள் உத்தரவைச் சிரமேற்