பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

இவற்றை அறிந்த பெருமானார் அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி விட்டார்கள்.

பெருமானார் அவர்கள் நேரில் சென்று கலந்து கொண்ட போர்களில் இதுவே கடைசியானது.

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு அருகில் வந்ததும், மக்கள் அனைவரும் நகரத்துக்கு வெளியே வந்து, மிகவும் ஆர்வத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.


48. பெருமானார் அவர்கள் கூறிய அறிவுரை

முன்பு முஸ்லிம் மதப் பிரச்சாரகர்களுக்கு அரேபிக் கூட்டத்தார் இடையூறு உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாத்தைப் பற்றி போதனை செய்யச் சென்ற பல பிரச்சாரகர்கள் அரேபியர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மக்காவை வெற்றி கொண்டபின், அந்தப் பயமானது அறவே நீங்கிவிட்டது. அதன்பின், பெருமானார் அவர்கள் அரேபியாவின் பல பகுதிகளுக்கும் இஸ்லாமியப் பிரச்சாரகர்களை அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்பப்படுபவர்களைப் பெருமானார் அவர்கள் சோதித்துத் தேர்வு செய்த பிறகே அனுப்புவார்கள்.