பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



ஆனால் ஒன்று-குடிகளை அல்ல. கொடும் பகையை!

உன் கொடிய கைகளை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். ஏனெனில், எங்களிடம் இரவில் எழும் திங்கள் போல் வருகின்றாய்!

சுட்ட கைகள், குளிர்கின்றன, வெம்மை சொரிந்த கண்கள், அருள் சொரிகின்றன...

ஆதலின், ஞாயிறும் நீ, திங்களும் நீ.


8. இரந்தும் உயிர் வாழ்வதோ?

இறந்துப் பிறந்தது குழந்தை. இல்லை, இல்லை. தசைப் பிண்டமாய்ப் பிறந்து விட்டது. வீரமன்னர் அதை என் செய்வர்? வாளால் அரிந்து புதைப்பர். ஏன்? மறக்குடியிற் பிறக்கும் எவ்வுயிரும் விழுப்புண் பட்டு மடிதல் வேண்டும். உயிர் வாழ விரும்பி உடல் கொண்டு திரிந்தால் மட்டும் போதாது. உண்டு கொழுத்த உடலை தமிழ்க் குடி விரும்பாது. மனிதனாய் இருக்க வேண்டும். மறவனாய் வாழ வேண்டும்.

அத்தகைய மறக்குடியில் பிறந்தேன் நான். நாய் போல் இழுத்தனர். பகைவர்-சிறைப் படுத்தினர். கட்டி வைத்தனர், அவர்களுக்கு அடங்கி, நடந்தேன். தண்ணீர் கொடும் என்று தாழ்ந்து கேட்டேன். இப்படி வாங்கிக் குடித்து வாழும் கோழையைப் பெறுமோ மறக்குடி பெறாது