பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



மேலே தெரிகிற பந்தலைப் போட்டவர் யார்? அதில் நிலாவையும் வீண் மீனையும் பதித்தது எப்படி? பந்தலுக்குக் கால்கள் இல்லையே காலில்லாப் பந்தல் அற்புதமான பந்தல். இவைகள் எல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா? இருந்த இடத்தில் கொண்டே எல்லாவற்றையும் அளக்கும் அறிஞர்கள் சொன்னார்கள்.

ஆனால், வானத்தை அளந்தவர்கள் எம் மன்னன் ஆற்றலை அறியும் திறன் பெறவில்லை.

யானை தன் கதுப்பிலே, அடக்கி வைத்து எறியும் கல்லைப் போன்று, சோழன் நலங்கிள்ளியின் ஆற்றலும் கண்காணாத் திறன் கொண்டது.

புலவர் அதனை எவ்வாறு பாடுவர்!


13. பரிசில் வாழ்க்கை!


அரசனுடைய ஏவலாளர்க்கு ஐயம் தோன்றியது. அதன் முடிவு என்ன தெரியுமா? கிள்ளியின் ஏவலாளர்கள் அயலூரான் ஒருவனைக் கைது செய்து காவலில் வைத்தனர். அவன் ஒற்றன் என்பதாக அவர்கள் கருதினர். கொற்றவனும் அக்கருத்தை ஏற்றான். இச்செய்தி கோவூர் கிழாருக்கு எட்டியது அவர் ஒடோடியும் வந்தார்.

என்ன இது? இளந்தத்தன் ஒற்றனா? என்று கேட்டார் கொற்றவன் திகைத்தான்!

கிழார் கூறினார்:

அரசே! பறவை எங்கும் பறந்து செல்கிறதே, அதனை ஒற்றன் என்று யாரும் கைது செய்வரோ? ஆனால், வேடர்