பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

45



38. ஒளவை கண்ட காட்சி

ஒளவை கண்ட காட்சி அத்துடன் அழியாத சொல் ஒவியம். “பிறந்த சேயைத் தாதியர் ஏந்தி நிற்கின்றனர். மகவினைப் பார்க்க ஓடோடி வருகிறான் மன்னன். போர்க்களத்திலிருந்து அப்படியே வருகிறான். கையிலே வேல், காலிலோ வீரக்கழல், மெய்யிலே வியர்வை, கழுத்திலே புதுப்போர்ப்புண் தலையிலே பனம் பூ மாலை, வெண் மலர் மாலையும் வேங்கை மலர் மாலையும் கலந்து கிடக்கின்றன தலையில். புலிபோல் சீறி வருகிறான். இன்னுமா சீற்றம் தணியவில்லை. புலியைக் குத்தி வீழ்த்திக் கோபம் அடங்காது நடக்கும் யானைபோலல்லவா வருகிறான். இன்னும் கோபம் தணியவில்லையே. ஐயோ பாவம் இவனிடம் அகப்பட்டவர் யாரோ, பெற்ற மகனைப் பார்த்தும் சினந் தணியவில்லையே, கண் சிவப்பு நீங்க வில்லையே. உன்னை எதிர்த்தவன் உயிரோடு இருக்கமாட்டான்” என்று பெருமூச்சு விட்டு இரங்கினாள் ஒளவைப்பாட்டி


39. முதலை வாய் யானை

“பாட்டி, பாட்டி” என்றார்கள் விரைக்க விரைக்க ஒடி வந்த சிறுவர்கள்.

“தம்பிமாரே ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்?” என்றாள் ஒளவை. ஆற்றுக்குக் குளிக்கப் போனோம். அதிக ஆழம் இல்லை பாட்டி”

“என்ன, யாராவது மூழ்கி விட்டார்களா?”