பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



“ஆள் ஆல்ல. யானை, பெரிய யானை”

“யானையா?”

“முதலை இழுத்துக் கொண்டு போய் விட்டது.”

“சிறிய அளவு நீர் என்றால் என்ன? நீருள் இருக்கும் போது யாரே முதலையை வெல்ல முடியும். இது போன்ற நம் மன்னன் அதியமான் ஆற்றலை உணராமல் இளையன் என்று இகழ்கிறார்கள் பகைவர்கள். அவர்கள் எண்ணம் ஒருநாளும் ஈடாது. முதலைவாய்ப்பட்ட யானை போல் மாள்வர்.”


40. எது உடைமை?

மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்:

“திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு உடைமையானது எது?

பண்டு தொட்டு நின் நாட்டைக் கடல் கவர்ந்து கொள்ளவுமில்லை.... பகைவர் கைப்பற்றவுமில்லை... ஆனால், பாடி வரும் பரிசிலர் உன் நாட்டைக் கைப்பற்றினார்கள்...

உனக்கு உடைமை எது?

உன் மனைவியின் மெல்லிய தோள்...

உன் நாடு?-அது பொதுவுடமை!