பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

49



அத்தகைய நாட்டின் மன்னன்தான் ஆய். கொடையில் முதலிடம் அவனுக்கு. அவனைத்தான் முன்னர் நினைக்க வேண்டும் அப்படிச் செய்யாத உள்ளம் ஆழ்ந்து போக வேண்டும். அவனையே பாடாத நாக்கு பிளக்கப்பட வேண்டும். அவன் புகழ் கேளாத காது துர்க்கப்பட வேண்டும்.


45. ஆடு! பாடு! அதோ...அவன் நாடு!

முடமோசி விறலி ஆய் என்று வாய் மணக்க மக்கள் கூறுகின்றனர். அவன் பெயரை நீகேட்டிருக்கின்றாய் ஆனால் அவனை நீ பார்த்ததில்லை!

விறலி: “நான் பார்க்க வேண்டும்!”

முடமோசி: அப்படியானால் நேரே நடந்து போ. அதோ ஒரு மலை தெரிகிறது பார். அதன் வழியாக நடந்து போ...

மலைக் காற்று வந்து நின் கூந்தலை (மயிரை)க் கோதி விடும். உன் செவியில் ஆய் பெயரை ஒதிவிடும்...

அணிமயில் போன்று அடி பெயர்த்து நடந்து செல். போ... ஆயைப் பார்... ஆடு... பாடு.... அதோ அவன் நாடு!


46. “உன்திரு உருவம்”

வெகு தொலைவிலிருந்து வருகிறான் பாணன். யாழைத் தன் மார்போடு அணைத்தபடியே நடந்து வருகிறான். விறலியோ பின்னால் மெல்ல நடந்து வருகிறாள். ஆய் வள்ளல் முன் நின்று யாழை மீட்டி இன்னிசை எழுப்பினான். விறலியோ கான மயிலெனக் களிநடனம் ஆடினள்.