பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



என் மனைவியோ, புலி புலி என்று பயமுறுத்துகின்றாள். அம்புலி காட்டி ஆசையூட்டுகின்றாள்.

ஆனால் பிள்ளையின் பசித் தீயை அவளால் அணைக்க முடியுமோ? என்று தேம்பி அழுதார் சித்திரனார்.

அவர் திரும்பு முன், தேரும் பொருட்களும் பிறவும் அவர்முன் காட்சியளித்தன.

குமணன் புகழ், தேர்க் கொடியிற் பறந்தது.


63. எல்லோர்க்கும் கொடு!

பெருஞ்சித்திரனார் இல்லம். வண்டியிலிருந்து பொன் மணிகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டுவந்து வைக்கின்றனர். பட்டாடை அணிந்து பல வகைப் பொன் அணிகளைப் பூட்டிய கோலத்தோடு பெருஞ்சித்திரனார் வீட்டிற்குள் நுழைகிறார். அவர் மனைவி மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறாள். பெருஞ்சித்திரனார் கூறுகிறார்:

“ஆருயிரே அனைவர்க்கும் பகுந்து கொடு. கடன் கொடுத்தவர்க்குக் கொடு. உன் தோழியருக்குக் கொடு. இனத்தவரை அழைத்து வந்து அள்ளிக் கொடு. யாருக்குக் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்று நினைக்காதே. எல்லார்க்கும் கொடு முதிரமலைத் தலைவன் குமணன் தந்த பொருளைப் பெட்டியில் பூட்டி வையாதே. மனம் போல் அள்ளி வழங்கு”.