பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

65


67. இன்று போல் என்றும் வாழ்க!

காரிக் கண்ணர் பிட்டனைப் பார்க்கச் சென்றார். இரவலர் பிட்டனை நாள்தோறும் வந்து மொய்த்தனர். சலிப்பின்றிப் பொருள் வழங்கினார். அவன் பேராண்மை வாய்ந்தவன். தன் தலைவன் விருப்பப்படியே போர் செய்து வெற்றி பெற்றான். அவன் வழங்கும் பரிசுகளுக்கு அளவே இல்லை. தொழுப் பசுவையே கேட்டாலும் கொடுத்து விடுகிறான். களத்தில் குவித்த நெல்லைக் கேட்டால் அவ்வளவையும் அள்ளிக் கொடுத்து விடுகிறான். அணிகலனோ, யானையோ எது கேட்டாலும் கொடுக்கிறான். அவனது கொடைக் குணத்தைக் கண்ட புலவர் “அவன் காலில் சிறு முள்ளும் குத்தக் கூடாது” என்று இறைவனை வேண்டினர்.


68. ஏற்றுக உலை ஆக்குக சோறு!

“ஏடீ விறலி” என்று பாணன் ஆசையுடன் கூப்பிட்டு கொண்டு வந்தான். ஒடி வந்தாள் விறலி.

உலையை யேற்று. சோற்றை ஆக்கு. விறலியே, கோதைகளைப் புனைந்து கொள்”

பிட்டங் கொற்றனா இவ்வளவையும் கொடுத்தார்?”

“பிட்டன் வெற்றி பெற்று விட்டான் அவன் வாழ்க! அவனது மன்னன் வாழ்க. அவன் மட்டும் என்ன? அவன் பகையும் வாழ்க!

பகையின்றேல் வெற்றி ஏது? நாம் பாடும் பெற்றி ஏது?