பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



81. பல்லாண்டு வாழ்வது எப்படி?

பல்லாண்டுகளாக நரையின்றி வாழ்தல் எப்படி? என்று கேட்கின்றீர்கள் சொல்கிறேன், கேளுங்கள்:

மனைவி நற்பண்பு நிறைந்தவளாய் இருக்க வேண்டும். அவளுக்குப் பிறந்த பிள்ளைகளும் அப்படியே விளங்க வேண்டும். ஏவலாளரோ, தான் எண்ணுவது போன்றே எண்ணிப் பணிபுரிய வேண்டும். காவலாளனாகிய வேந்தனும், நாம் வீட்டைக் காப்பது போன்றே நாட்டைக் காக்கவேண்டும்.

அது மட்டுமா?

ஊரில் வாழும் சான்றோர், அடங்கிய கொள்கையுடைய ஆன்றோராய்த் திகழ வேண்டும்.

அப்புறம் நரை ஏன் வரும், திரை ஏன் வரும், குறை ஏன் வரும்?


82. யாதும் ஊரே, யாவரும் கேளிர்!

பூங்குன்றனாரைப் பார்க்க வந்தார் ஒரு நண்பர். சிட்டுக் குருவி போல் கவலையற்ற வாழ்வு வாழ வழி கூறும்படி கேட்டார். புலவர் தம் பொன்னுரையைத் தொடங்கினார்.

“எல்லா ஊரும் நம் ஊரே! எல்லோரும்: நம் உறவினர்!

தீமையும் நன்மையும் பிறர் கொடுக்க வருவதில்லை நம்மால் ஏற்படுவன!