பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்


பெற்றாள். பாணனோ வெள்ளிநாரில் தொடுக்கப் பெற்ற பொற்றாமரைப் பூ மாலை பெற்றான்.

இதனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் இளவெயினி.

“எனக்கேன் பரிசளிக்கவில்லை” என்றாள். பரிசுப் பொருள்கள் வந்து குவிந்து கிடந்தன.


92. அறனோ? திறனோ?

நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்க்கச் சென்றார். இன்முகத்தோடு வரவேற்றான். மகிழ்ந்து உரையாடத் தொடங்கினார். “அரசே உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. உன்னிடம் வருவோர் அனைவரையும் ஒரே தன்மையாக வரவேற்பதில்லை நீ”

“எல்லோரையும் நன்கு வரவேற்கிறேனே. இப்போது தானே உங்கள் கண்முன் பாணர்களுக்குப் பரிசளித்தேன்”

“ஆம், பாணர்களுக்குப் பொற்றாமரைப் பூவைச் சூடுகிறாய். புலவர்களுக்கு யானையும் தேரும் அளிக்கிறாய். ஆனால் உன்னிடம் வரும் பகைவர் மண்ணைப் பறித்துக் கொள்கிறாயே, புலவரிடம் இனிக்கப் பேசும் நீ பகைவரை சினந்து நோக்குகிறாயே!”


93. “கையைக் காட்டு”

கபிலர், செல்வங் கடுங்கோ வாழியாதனைப் பார்க்கச் சென்றார். “கையைக் காட்டு” என்றார் புலவர். புலவர் கை ரேகை பார்க்கப் போகிறாரோ என்று கையைக் காட்டி நின்றான். கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே,