பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

83



“கொலையானைகளை இழுத்துப் பிடிக்கிறது உன் கை. குதிரைகளை அடக்குகிறது உன் கை. வில்லை வளைக்கிறது உன் கை வந்தவர்க்குப் பரிசுகளை வாரி வாரி வழங்குகிறது உன் கை. இதனால் உன் கை உரம் பெற்றிருக்கிறது. இது உலக இயல்புதான்

மன்னன் கையை விடுத்தார். தன் கையைக் காட்டினார். “என் கையைப் பார். ஊனும் கறியும் சோறும் துவையலும் எடுத்து உண்பதைத் தவிர வேறு இல்லை. இதனால் தான் என்னைப் போன்றவர் கைகள் மென்மையாய் இருக்கின்றன. இதுவும் உலகத்து இயல்புதானே” என்றார்.


94. மதம் பிடித்த யானை!

யானைக்கு மதம் பிடித்தது. அது, கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு பிளிறியவாறு, ஒட்டம் எடுத்தது.

பெருநற் கிள்ளி அதனைப் பார்த்தான். அதன் மதத்தை அடக்குவேன் என்று எழுந்தான். யானையை எதிர் கொண்டான்; அதன் மேற் பாய்ந்தான் முதுகில் மேல் அமர்ந்து காதுகளைப் பற்றித் திருகினான்; கால்களைக் கொண்டு, வயிற்றில் இடித்தான்.

யானை, அடிபட்டதும் மேலும் விரைந்தது; புயல் போல் பறந்தது.

மக்கள் மருண்டனர். “ஐயோ, யானைக்கு மதம் பிடித்து விட்டதே, அதன்மேல் அமர்ந்திருப்போன் எவன்?” என்று கேட்டனர். புலவர் கூறினார்:

“அவன் பெயர் மறலி! புலி நிறக் கவசத்தில் கணைகள் பாய்ந்து கிழித்த மார்பைக் கொண்டவன்.