பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

85



“மன்னா கேள். நீ பனம் பூ மாலையோ வேப்பந் தாரோ அணியவில்லை. ஆத்திமாலை அணிந்திருக்கிறாய். உன்னை எதிர்ப்பவன் கண்ணியும் அதுவே. இருவர் வெல்லுதல் இயல்பு அல்ல. ஒருவர் தோற்பது உறுதி. அவனும் சோழனே. உங்கள் செயலால் குடி பெருமையடையாது. பிறர் கண்டு எள்ளி நகையாடுவர்” என்று கூறிக் கொண்டே மன்னனை இழுத்துச் சென்றார். ஆட்டுக் குட்டிபோல் பின் தொடர்ந்தான். நெடுங்கிள்ளியிடம் வந்தனர். பகை முறிந்தது. உறவு நிலைத்தது.


96. “மரம்படு சிறு தீ”

வேல் முனையால் நெற்றி வியர்வையைத் துடைத்து நின்று வெஞ்சினங் கூறினான் வேந்தன். பெண் கேட்க வந்தவன் அவன்.

மகட் கொடை மறுக்கும் தந்தையும் மறச் சொற்கள் கிளத்தினான்!

இது, போர் வரும் என்பதற்கு அறிகுறி! மன்னன் மகள் ஒடி வந்தாள்.

“அப்பா என்னால்தானே இவ்வளவு கேடு” என்றாள்

மன்னன், “பெண்ணே, பெரிய மரத்தில் பட்ட சிறு தீ, மரம் முழுவதையும் சுட்டெரிக்கும்! அதுபோல், இவ்வூரிற் பிறந்த சிறுமி நீ உன்னைத் துணைகொண்டு போர்த் தீ புகைகின்றது. அது, ஊரையே சுட்டெரிக்கப் போகின்றது” என்றான்.