பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

89


ஈடுபட்டவன். “நொச்சியே, மங்கையர் மட்டுமல்ல மாபெரும் வீரரும் காதலிக்கும் காதல் நன் மரமானாய்” என்று வாழ்த்திக் கொண்டே சென்றார்.


103. “கணவன் ஊர்ந்த குதிரை”

மறக்குல மங்கை. ஒரே புதல்வன். அவனும் கைக்குழந்தை போர் முரசு முழங்கியது. கணவன் விடை பெற்றுப் போய்விட்டான்.

போர் முடிந்தது. சிலர் திரும்பினர். யானை, பரி, தேர் மீது வந்தனர். கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு வரும் குதிரைகளை யெல்லாம் பார்க்கிறாள்.

தன் கணவன் ஏறிச் சென்ற பரியைக் காணவில்லை. கணவனையும் காணவில்லை. கவலை பற்றியது.

“குதிரை வரவில்லை. எல்லோருடைய குதிரைகளும் வந்து விட்டனவே. என் கணவர் ஊர்ந்து சென்ற குதிரை வரக்காணோமே. இரு பேராறு கூடும் இடத்தில் அகப்பட்ட பெரு மரம்போல், இரு பெரும் படைக்கு இடையே அகப்பட்டு அலைப்புண்டு அழிந்ததோ?” என்று புலம்பினாள்.


104. “உறை மோர்த் துளி”

ஒரு முது மகள் அவள் தோற்றம் எப்படி இருக்கிறது?

மணப் பொருள் மறந்த கூந்தல், நரைத்த தலை, பஞ்சடைந்த கண்கள், சுருக்கம் விழுந்த தோல். அவள் வற்றி உலர்ந்த கள்ளிபோல் தோன்றுகின்றாள். ஆனால் அவள் பெற்றெடுத்த மகன் யார் தெரியுமோ?