பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்



“என் மகன் புறங் கொடுத்திருப்பின் அவனுக்குப் பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன் என்று வஞ்சினங் கூறி, வாளேந்திப் போர்க்களம் நோக்கி ஓடினாள்.

போர்க்களம் புகுந்தாள். எங்கும் பிணக் குவியல். பிணங்களை நீக்கி விட்டுத் தன் மகனைத் தேடினாள். செங்குருதி நடுவே சிதைந்து கிடந்தான் மகன். பெற்ற நாளினும் பெருமகிழ்ச்சி கொண்டாள் அம் முது மறத்தி.


111. ஒரே மகன்

முதல் நாள் போரிலே, பகைவர் தம் யானையைக் கொன்று, தந்தை மடிந்தான், இரண்டாம் நாள் போரிலே, நிரைகவர்ந்த பகைவரை மறித்துக் கொன்று மடிந்தான் கொழுநன்!

மூன்றாம் நாளும் போர்ப் பறை ஒலித்தது...

கணவனும் தந்தையும் மடிந்த பின்னரும், தன் ஒரே மகனையும் போர்க்கு அனுப்பப் புறப்பட்டாள் அம்மறத்தி

தன் மகனுக்குப் புத்தாடை உடுத்தினாள்; அவன் தலையில் எண்ணெயிட்டு வாரினாள்;

வேல் ஒன்றை எடுத்துக் கையில் கொடுத்தாள்.

“போ, மகனே, போ...

“போர்க்களம் அழைக்கிறது, போ” என்று அனுப்பினாள்.