உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


இவன் இரு கட்சிகளிலும் சென்று வேலை செய்த காலத்தில்தான் இவன் இருதலை மணியன் என்பது தெரிந்தது- இதில் வந்துள்ளது. இருதலை மணியன் என்பதாம். சிதம்பரனர் தமக்கென வாழாப் பிறர்க்குரியாள ராய் வாழ்ந்தார்- இதில் வந்துள்ளது, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர். மற்றையவற்றையும் இவ்வாறே வாக்கியங்களில் அமைத்துக் காண்க. சொற்ருடர் மரபுத் தொடர்களை வாக்கியத்தில் அமைத்தல் தமக்கென வாழாப் பிறர்குரியாளராகிய சிதம்பரனர் தாமெடுத்த காரியத்தில் கண்ணுங் கருத்துமாய் அல் லும்பகலும் உழைத்தார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசா தவரே இவ்வுலகில் பேரும் புகழும் அடைந்தனர். சொற்ருெடரும் மரபுத் தொடரும் கலந்த வாக்கி யங்கள் நல்ல இனிமை பொருந்திய நடையாகும். 9. உவமைகளையும் பழமொழிகளையும் முருகனின் அம்பு கண்ட சூரன் கடன் கொண்டார் நெஞ்சம் போலும் கலங்கின்ை - இதில் சூ ர ன் கலங்கிய தன்மையைக் கடன் கொண்டார் நெஞ்சம் போலும் என்ற உ வ ைம தெளிவு படுத்துகின்றது. 'மருந்தேயாயினும் விருந்தோடு உண்’ என்ற ஆன்