65 2. பின் வருவனவற்றைத் திருத்தி, அவ்வாறு திருத்திய தற்குக் காரணமும் கூறுக :- மன்சள், கன்டம், பன்தல், மண்றம், வண்து, பூன்டு, வன்தான். குற்றியலுகரம் 9. சாதாரணமாக உகரத்திற்கு மா த் தி ைர ஒன்று. அந்த மாத்திரையிற் குறைந்து வரும் உக ரம் குற்றியலுகரமாம். குறுகிய ஓசையை உடைய உகரம் குற்றியலுகரம் (குறு + இயல் + உகரம்) 10. இக்குற்றியலுகரம் எ ப் .ே பா து ம் சொல் லின் கடைசியில் வரும். அவ்வாறு வரும் உகரம் வல்லின மெய்களின்மேல் ஏறிய உகரமாக இருக்க வேண்டும். அவை கு, சு, டு, து, பு, று என்பன. 秀+2-=@ チ+2-=チ L+a-=@ 芳+a-=g ப்+அ=பு. ம் +உ=று.) (உ-ம்) கக்கு பந்து பஞ்சு அம்பு துண்டு கன்று குறிப்பு: மாணவர்கள் இவ்விடத்தில் ஒன்றைமனத்தில் நன்கு பதியவைத்துக்கொள்ளவேண்டும். அதாவதுஇந்தக் கு,சு,டு,து,பு,று என்னும் வல்லின மெய்யின்மேல் ஏறிய உகரமும், நகு.பசு, அடு என்பன போலத் தனிக்குற்றெழுத் தோடு வரக்கூடாது என்பது. அவ்வாறு வரும் உகரம் குற்றியலுகரம் ஆகாது. கேள்விகள் 1. குற்றியலுகரம்’ என்பதற்குப் பொருள் என்ன ? இத்தொடரைப் பிரித்துக் காட்டுக.