பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

27
அன்பு வழியே சிறந்தது

தட்சசீலம் என்ற நாட்டை கலிங்கதத்தன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் புத்தமதத்தைத் தழுவியவன்.

புத்த மதமே உலகில் சிறந்தது என்ற கருத்தோடு மிகுந்த பற்றுதல் கொண்டு, அந்த மார்க்கத்தின் குருமார்களில் ஒருவனாக விளங்கி வந்தான்.

அந்த நகரத்தில் விசாகன் என்ற செல்வந்தன் பெரிய வணிகனாக இருந்தான். அவனும் புத்த மதத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு இரத்தினம் என்ற பெயருடைய மகன் ஒருவன் இருந்தான்.

இளைஞனான அவனுக்கு தன் தந்தை பின்பற்றும் புத்த மதத்தில் வெறுப்புக் கொண்டவன். அதனால் புத்த மதத்தையும் தன் தந்தையையும் எப்பொழுதும் இகழ்ந்து பேசிக் கொண்டு இருந்தான்.

ஒரு நாள், “தந்தையே! பழமையான வேதங்களை உடைய நம்முடைய இந்து மதத்தை மறந்து விட்டீர்கள். அந்தணர்களை வெறுத்து, மற்றவர்களை மதித்து வருகிறீர்கள். புத்த மதக் கொள்கைகளை பெரிதாக மதித்துப் போற்றிப் புகழ்கின்றீர்கள், கீழ் மக்களுக்கு அடைக்கலம் தரும் இருப்பிடம் புத்த மதம். பிராமணியச் சடங்குகளை மறுப்பதே அதன் கொள்கை. அருள் நெறி மறந்து, இந்து மதத்துக்குத் துரோகம் விளைவிக்கிறீர்கள்.” என்று பலவாறு உரக்கப் பேசலானான் விசாகனின் மகன் இரத்தினம்.

தந்தை விசாகன், மகனுக்கு பல கருத்துக்களை எடுத்துக் கூறி, சமாதானப்படுத்த முயன்றான்.

“உலகம் முழுவதும் பரவித் தழுவும் புத்த மதத்திற்கும், இதர