பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

அறிவுரை அருள வேண்டிக் கொள்கிறேன்” என்று வேண்டிக் கொண்டான் இரத்தினம்.

அதைக் கேட்டதும் அரசன் புன்முறுவலுடன், ஒரு சட்டி நிறைய எண்ணெய் கொண்டு வந்து இரத்தினத்திடம் கொடுக்கும் படி உத்தரவிட்டான்.

“இரத்தினா! இதோ உன் கையில் உள்ள சட்டியின் விளிம்பு வரையில், எண்ணெய் உள்ளது. அதைக் கையில் ஏந்தியபடியே, இந்த நகரத்தைச் சுற்றி வரவேண்டும். ஒரு துளிகூட கீழே சிந்தக் கூடாது, சிந்தினால், வாள் ஏந்தி உன்னுடன் வருகின்ற சிப்பாய்கள் அந்த இடத்திலேயே, உன்னைக் கொன்று விடுவார்கள்” என கட்டளையிட்டான் அரசன்.

உருவிய வாளுடன் சிப்பாய்கள் பின் தொடர்ந்து வர, இரத்தினம் மிகவும் கவனத்தோடு எண்ணெய்ச் சட்டியை ஏந்தி, ஒரு துளி எண்ணெய் கூட சிந்தாமல், நகரம் முழுவதையும் சுற்றி வந்து, அரசன் முன் நின்றான்.

“இரத்தினா! நகரத்தைச் சுற்றி வந்ததில், ஏதேனும் சிறப்பைக் கண்டாயா?” என்று கேட்டான் அரசன்.

“அரசே! எண்ணெய் சிந்திவிடக் கூடாதே என்ற கவனத்தில், சிந்தினால் உயிர் போய் விடுமே என்ற அச்சத்தினால், எந்தப் பகுதியிலும், என் கண்களுக்கு எதுவுமே தென்படவில்லை. மனதை எதுவும் கவரவும் இல்லை” என்றான் அவன்.

“இப்பொழுது தெரிந்து கொண்டாயா? ஒரே உறுதியான எண்ணத்தால் அருகில் உள்ளவற்றை நீ மறந்தாயே. அந்த ஒரு எண்ணமே தியானம் என்பது. அத்தகைய சிந்தனை சிதறாத தியானத்தில் இருப்பவன் உலக ஆசைகளிலும் பந்தங்களிலும் மீண்டும் சிக்கிக் கொள்வதில்லை.” என்றான் அரசன்.