பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அறிவுரையும், அறஉரையும் உணர்த்திய அரசனின் அன்பு வழியைக் கேட்ட இரத்தினம், அருள்வழி எது என்பதை தெரிந்து கொண்டான்.

மகனின் அருள்வழி நோக்கை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான் விசாகன்.

இக்கதை சிறுவர் சிறுமியர்க்கு சற்று கடினமாக இருக்கலாம். என்றாலும், இப்பொழுதே தெரிந்து கொள்வது நல்லது தானே


28
செத்த எலியால் வியாபாரி ஆனான்

சிறிய நகரம் ஒன்றில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவன் பெற்றோர் இறந்து விட்டனர். உறவினர் எவரும் இல்லை. குடியிருக்க சிறிய வீடு மட்டும் இருந்தது. வேலையும் கிடைக்கவில்லை. ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்றால், பணமும் இல்லை.

அவனிடம் அனுதாபம் கொண்ட ஒருவர், ஒரு யோசனை கூறினார்: “பக்கத்து ஊரில், ஒரு செட்டியார் இருக்கிறார். வியாபாரம் செய்யக் கடன் கொடுப்பார். பிறகு, வட்டியோடு அசலையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அவரிடம் சென்று கேட்டுப் பார்” என்று கூறினார்.

மறுநாள் மிகுந்த உற்சாகத்தோடு செட்டியாரைக் காணச் சென்றான் அந்த இளைஞன்.

அந்த நேரத்தில் செட்டியார், ஒருவனைக் கோபித்துக் கொண்டிருந்தார். அவன் செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், அசலும் வட்டியும் கொடுக்கவில்லை என்று பேச்சில் தெரியவந்தது.