பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

இதுவே நல்ல சமயம் என்று நினைத்த ஆமை, அருகில் இருந்த நதிக்குள் குதித்து மறைந்தது.

ஆமை தப்பியதைக் கண்ட மான், விர்ரென்று பாய்ந்து ஓடிவிட்டது.

காக்கை பறந்து மரத்தின்மீது அமர்ந்தது. எலி தூரத்தில் நின்று பார்த்து மகிழ்ந்தது.

ஆமையும், மானும் ஏமாற்றியதை எண்ணி வேடன் வருத்தத்தோடு வீட்டுக்குத் திரும்பினான்.

பிறகு, அந்த ஜீவன்களும் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து வாழ்ந்தன.


40
கடல் எவ்வளவு பெரியது?

கடலில் வசித்து வந்த தவளை ஒரு நாள் கரைக்கு வந்தது. அருகில் இருந்த கிணற்றில் வசித்த தவளையும் வெளியே வந்தது.

இரண்டு தவளைகளும் சந்தித்துக் கொண்டன. ஒன்றை ஒன்று அறிமுகம் செய்து கொண்டது.

அப்போது, “கடல் எவ்வளவு பெரிது?” என்று கேட்டது கிணற்றுத் தவளை. ஏனென்றால் அதற்கு கடலைப் பற்றி தெரியாது.

"கடல் மிகப் பெரிது!” என்றது கடல் தவளை. “இவ்வளவு பெரிது என்று ஒரு அளவு சொல்லு” என்று கேட்டது கிணற்றுத்தவளை.

“அதாவது கடலுக்கு அளவே கிடையாது. எங்கே