பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வேடன் மகிழ்ச்சியோடு, வலையிலிருந்து ஒவ்வொரு பறவையாக எடுத்து தன்னுடைய கூடைக்குள் போட்டுக் கொண்டான்.

ஒற்றுமை இல்லாவிடில் அழிவுதான்!


49
சந்நியாசி சம்சாரி ஆனான்

ஒரு சிற்றூரில் சந்நியாசி ஒருவன் இருந்தான். அவன் நாள்தோறும் வீடுவீடாகச் சென்று, பிச்சை எடுத்து உண்டு, இரவில் மரத்தடியில் தூங்குவான்.

ஊரை ஒட்டியுள்ள புறம்போக்கு நிலத்தில் சிறுகுடிசை போட நினைத்தான். அதற்காக பலரிடம் யாசகம் வாங்கி, ஒரு குடிசையைக் கட்டினான்.

பக்கத்தில் இருந்த காலி இடத்தில், கீரை முதலிய காய்கறிகளைப் பயிர் செய்தான், அதை விற்று, கிடைத்த பணத்தில் தானே சமைத்து உண்ண தொடங்கினான்.

குடிசையில் எலித்தொல்லை உண்டாயிற்று. அவனுடைய வேட்டி துண்டுகளை எலிகள் கடித்து குதறிக் கொண்டிருந்தன.

அதற்காக, பூனை ஒன்று வாங்கி வளர்க்கலானான்.

பூனைக்குப் பால் வாங்கி வருவதற்காக ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்தான்.

காய்கறி விற்பனையால் கிடைத்த பணம், சிறுகச்சிறுக சேர்ந்து இருந்ததால், ஒரு பசுவை வாங்கிக் கட்டினான்.