84
ஒரு நகரத்தில் பணக்கார வியாபாரி ஒருவன் இருந்தான்.
அத்தியாவசியப் பொருள்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, ஒரு தீவுக்குச் சென்று விற்று வருவது அந்த வியாபாரியின் தொழில்.
வியாபாரிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் படிக்கவில்லை. இளைஞனாக இருக்கும் போதே தன் மகனுக்கு தன்னுடைய வியாபாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான் தந்தை.
பொருள்களைச் சேகரித்துக் கொண்டு தீவுக்குப் புறப்படத் தயாரானான் வியாபாரி.
அப்போது விலை உயர்ந்த ஒருவித வாசனை மரக் கட்டைகளையும் கொண்டு சென்றால், நல்ல விலைக்கு விற்கலாம் என்று நினைத்து, நிறையக் கட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு, கூடவே மகனையும் அழைத்துச் சென்றான் வியாபாரி.
தீவில், வழக்கம் போல் கொண்டுபோன பொருள்கள் யாவும் விற்பனை ஆயின! ஆனால், புதிய வாசனை மரக்கட்டைகளை மட்டும் தீவில் உள்ள மக்கள் விரும்பவில்லை.
அதனால் அவற்றைத் திரும்பக் கொண்டு வரத் தீர்மானித்திருந்தான் வியாபாரி.
வேறு பொருள் ஏதாவது வாங்கி, தன்னுடைய ஊருக்குக் கொண்டு போய் விற்கலாமே என்ற எண்ணத்தில் பல பகுதிகளுக்கு அலைந்தான் வியாபாரி.