பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

வியாபாரி வெளியே போயிருந்த சமயம் மகன் மட்டும் இருந்தான். தீவுவாசிகள் கரிமூட்டை வாங்கிச் செல்வதைப் பார்த்தான்.

விற்பனை ஆகாமல் கிடந்த வாசனைக் கட்டைகளைச் சுட்டு கரியாக்கி விற்றுவிட்டான் மகன்.

மேலும் புத்திசாலித்தனமாகத் தான் செய்து விட்டதாக நினைத்து மகிழ்ந்து போனான் வியாபாரியின் மகன்.

வியாபாரி திரும்பி வந்தார். “அப்பா! மிகவும் புத்திசாலித் தனமாக வாசனைக் கட்டைகளை வாங்காத இந்தத் தீவு மக்களிடம் கரியாக்கி விற்று விட்டேன்” என்று பெருமையாகக் கூறினான்.

“அடமுட்டாளே! நல்லவிலைக்கு விற்க வேண்டிய வாசனைக் கட்டைகளைக் கரியாக்கி நஷ்டம் ஏற்படுத்தி விட்டாயே?” என்று தலையில் அடித்துக் கொண்டு வருந்தினான் வியாபாரி!