பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

சம்பாதிப்பதில் உனக்கும் ஒரு பங்கு தருகிறோம்.” என்று ஆதரவாகக் கூறினான்.

எல்லோரும் சம்மதித்துப் புறப்பட்டனர்.

வழியில் ஒரு சிங்கத்தின் எழும்புக் கூட்டைப் பார்த்தனர். அவர்களில் ஒருவன், “நாம் கற்றுக் கொண்ட கலைகளையும், கல்வியையும் சோதித்துப் பார்த்துக் கொள்ள இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்து இருக்கிறது. ஆகையால் இங்கே இறந்து கிடக்கும் மிருகத்தை நம் வித்தையின் பெருமையால் உயிர்பெற்று எழச் செய்வோம்” என்றான்.

அப்பொழுது ஒருவன், “எனக்கு எலும்புகளை ஒன்று சேர்க்கத் தெரியும்” என்றான்.

“தோலும், சதையும், இரத்தமும் அளிக்க என்னால் இயலும்” என்றான் மற்றொருவன்.

“அதற்கு உயிர் அளித்து என்னால் எழச் செய்ய இயலும்” என்றான் இன்னொருவன்.

“பிறகு ஒவ்வொருவரும் சொன்னபடி, ஒருவன் எலும்புகளை எல்லாம் இணைத்துப் பொருத்தினான். அடுத்தவன் தோல், சதை, இரத்தத்தை நிரப்பினான். மூன்றாவது நண்பன், அதற்கு உயிர் கொடுக்க ஈடுபடும் பொழுது, அவனைத் தடுத்து, “நண்பனே, இது சிங்கம்! இதற்கு நீ உயிர் ஊட்டி எழச் செய்தால், அது நம்மைக் கொன்று தின்றுவிடும். ஆகையால் உயிர் அளிக்க வேண்டாம்” என்று கூறினான் புத்திசாலியான நான்காவது ஆள்.

“முட்டாளே, மற்ற இருவரும் தங்கள் வித்தையைக் காட்டிவிட்டனர். ஆனால் நான் கற்ற வித்தையை பயனற்றதாக்க விரும்பவில்லை.” என்றான் மூன்றாவது நண்பன்.