88
”அப்படியானால் ஒரு கணம் பொறுத்துக் கொள். அதற்குள் நான் இந்த மரத்தின் மீது ஏறிக் கொள்கிறேன்.” என்று கூறி, அவ்வாறே மரத்தில் ஏறிக்கொண்டான் புத்திசாலி நண்பன்.
மூன்றாவது நண்பன், சிங்கத்துக்கு உயிர் உண்டாகச் செய்தான்.
உயிர் பெற்று எழுந்தது சிங்கம். எதிரே மூன்று மனிதர்களைப் பார்த்தது, உடனே அவர்கள் மீது பாய்ந்து மூவரையும் கொன்று தின்று விட்டது.
புத்திசாலி மட்டும் உயிர் பிழைத்து ஊருக்குச் திரும்பினான்.
ஆற்றங்கரையில் ஒருவன் துணி துவைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் குளிக்கப்போன ஒருவன் ஆழத்தில் சிக்கிக் கொண்டான்.
துணி துவைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “தோழனே! என்னைக் காப்பாற்று” என்று குரல் கொடுத்தான்.
“உன்னைக் காப்பாற்றினால், எனக்கு என்ன தருவாய்” என்று கேட்டான் துணி துவைத்தவன்.
“நான் படித்தவன் உனக்குக் கல்விக் கற்றுத் தருகிறேன்” என்றான் தண்ணீரில் சிக்கிக் கொண்டவன்.
துணி துவைப்பவன் சரி என்று அவனிடம் நெருங்கும் போது “நீ கொஞ்சமாவது படித்திருக்கிறாயா? இல்லையா? என்று கேட்டான்.