பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii பழங்கதை சொல்லிச் சொல்லிப் பண்டைநற் பெருமை பேசிப் பொழுதினை வீணே போக்கும் புல்லர்போ லிருந்தி டாமல் அழகுடைத் தமிழ்க்கன் னிக்கு அணிகலனாகும் நூல்கள் இழைத்திழைத் திட்டுப் பார்த்து இன்புறும் மனத்த ராவார்! கன்னலின் இனிமை தோற்கக் கற்கண்டுத் தமிழு ரைப்பார்! முன்னிய ஆழ்வார் பாட்டில் மூழ்கியே இன்பம் காண்பார்! தன்னிகர் இல்லா வண்ணம் தமிழ்ப்பணி நாளும் செய்வார் மன்னவர் இவர்ப டைத்த மாநூல்கள் கொஞ்ச மாமோ? அறிவியல் நூல்கள் தந்தார் ஆய்வுநூல் பலவும் தந்தார் நெறியிலக் கியங்கள் தந்தார் நேர்சமய நூல்கள் தந்தார் வரலாற்று நூல்கள் தந்தார் வனப்பாசி ரியநூல் தந்தார். உரனேற்று மிவர் நூல் மொத்தம் ஒரெண்பத் தேழு ஆகும்! காவியச் சுவையில் தோய்ந்துக் கலைபல ஆய்ந்தும்,கற்றும் பாவியல் திறங்கள் தேர்ந்தும் பலது ல்கள் கொடுத்ததாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/10&oldid=863943" இலிருந்து மீள்விக்கப்பட்டது