ஆலவாய் நிகழ்ச்சிகள் 133
இவனையே முதலாமவனாகக் குறித்துச் செல்லுகின்றனர். அவர்கள் போனபின் இந்தக் கூலியாள் கூடையைத் தலைக் கணையாக வைத்துக் கொண்டு கால்மேல் கால்போட்டுக் கொண்டு படுத்திருக்கின்றான். அங்கு நிகழும் வேலைகளைக் கண்காணிக்க அரசனால் அனுப்பப்பட்ட பணியாளர் சிலர் அங்குவந்து ‘மண்சுமவாது படுத்திருக்கும் இவன் யார்?’ என வினவுகின்றனர். அங்குள்ள ஆட்கள் இவன் செம்மனச் செல்வியின் ஆள் என்கின்றனர். அதுகேட்ட பணியாளர் கூலியாளாகிய இறைவனை நோக்கி அதிகாரியிடத்தில் உன்னை ஒப்படைப்போம் வா’ என அழைக்க, அவனும் தண்டத் தலைவராகிய அதிகாரியின் முன்வந்து நிற் கின்றான்.
தண்டத் தலைவன் அவனைக் கண்டு அதிசயமுற்று "மெல்லிய உடம்பினனாகிய நீயார்? விளங்கச் சொல் என்று கேட்க, அவனும் ஐயா, தந்தை. தாய், உடன் பிறந்தார். சுற்றத்தார் ஒருவரும் எனக்கு இலர். இப்பெரிய நகரில் ஒரு மூலையிலிருக்கும் கொற்றாள் யான். பிறர்க்கென உழைப்பதே எனது தொழில். என்னைக் கொண்டு அதிகாரிக்கு என்ன ஆக வேண்டும்? என்கின்றான் இறைவனாகிய கூவியாள். இம்மொழியினைக் கேட்டு வெகுண்ட அதிகாரி கூலியாளை நோக்கி உனக்கு அளந்து கொடுத்த கோலறையில் ஒரு கூடை மண்கூட இடவில்லை. சிறிதும் அச்சமின்றி உரையாடுகின்றாய். உன்னை நூறு அடிகள் அடித்தாலும் தகும். உன் உடலின் மென்மையைக் கண்டு அடிக்க மனம் வரவில்லை. விரைந்து சென்று மண்ணை வெட்டியிட்டுக் கரையை அடைப்பாயாக எனக் கடிந்து கூறிச் செல்லுகின்றான் கொற்றாளாகிய அவன் அவ்விடத்தை விட்டு அகன்று முன்போல் படுத்துக் கொள்ளுகின்றான். மன்னன் ஏவலால் மீண்டும் கரையை நோக்கிவந்த தண்டத் தலைவர்கள் பிட்டு வாணிச்சிக்கு அளந்து