பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 மாணிக்கவாசகர்



பார்க்கும் பெருமங்கலத்தைத் தர வல்லதும், திருமறை மரத்துக்கு வித்தாகவுள்ளதும், காழிச் சிவக்கன்றால், "வேதநான்கினும் மெய்ப் பொருளாவது (3.49 : 1) என்றும், 'சித்தும் வல்வினை செல்வமும் நல்கும் (3.49 : 6) என்றும் நாவரசரால் கற்றுணைப் பூட்டியோர் கடலிற்பாய்ச்சினும் நற்றுணையாவது (4.11 : 1) என்றும், 'நாவினுக்கு அருங்கலம் (4.11 : 1) என்றும், நல்லக விளக்கு (4.11 : 8) என்றும்; தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என்ற மூன்று முறைகளால் ஒதப்பெறுவதும் ஆகிய திருவைந்தெழுத்தை முதலாக வைத்து நமச்சிவாய வாழ்க எனத் தொடங்கப் பெறுவது இப்பனுவலின் தனிச்சிறப்பாகும்.