இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
255 மாணிக்கவாசகர்
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகே சன்தனக்கு தொண்டக் குலத்தில் உள்ளிர்வந்(து)அடிதொழுது ஆயிர நாமம்சொல்லி பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபபல் லாயிரத் தாண்டென்மினே - திருப்பல்லாண்டு.5
(அண்டம் - உலகுருண்டை; அதிபதி - தலைவன்: இண்டைக் குலம் - நெருக்கமான கூட்டம்; தொண்டைக்குலம் - அடியார் திருக்கூட்டம் ; பண்டைக் குலம் - பழைய குலம் (பயனை விரும்பிக் கிடக்கும் பழையதன்மை))
கொன்றுயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம் நின்றுஇவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான்தமர் போந்தார் நன்றிசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பறந்தார் சென்று தொழுதுய்ம்மின்; தொண்டீர்! சிந்தையைச் செந்நி றுத்தியே - திருவாய் 5.2 : 6
(கொன்று - கொலை செய்து; விசாதி - வியாதி; பகை - வெறுப்பு; தீயன - கொடியவை; நேமி - சக்கரம்; நேமிப் பிரான்தமர் - பாகவதர்கள்; ஞாலம் - பூமி; பரந்தார் - பரவியுள்ளனர்; சிந்தை - நெஞ்சு; செம் நிறுத்தி - செம்மையாக நிலைநிறுத்தி)
இம்மூன்று திருப்பாடல்களும் அடியார்களை அழைத்து உய்யுமாறு அறிவுரை புகட்டுகின்றன.